img Leseprobe Leseprobe

விவேக் விஷ்ணு வெற்றி

ராஜேஷ்குமார்

EPUB
ca. 1,38
Amazon iTunes Thalia.de Weltbild.de Hugendubel Bücher.de ebook.de kobo Osiander Google Books Barnes&Noble bol.com Legimi yourbook.shop Kulturkaufhaus
* Affiliatelinks/Werbelinks
Hinweis: Affiliatelinks/Werbelinks
Links auf reinlesen.de sind sogenannte Affiliate-Links. Wenn du auf so einen Affiliate-Link klickst und über diesen Link einkaufst, bekommt reinlesen.de von dem betreffenden Online-Shop oder Anbieter eine Provision. Für dich verändert sich der Preis nicht.

Pocket Books img Link Publisher

Belletristik / Spannung

Beschreibung

இன்டர்காம் கூப்பிட்டது.
பார்த்துக் கொண்டிருந்த ஃபைலினின்றும் பார்வையை எடுக்காமல் கைநீட்டி ரிஸீவரை எடுத்தான் சித்தார்த்தன். முப்பது வயது. ஐந்தடி பத்து அங்குல உயர உடம்பு. மெலிதான இள நீல நிற சூட் - இவைகளின் கூட்டணியில் இருந்த சித்தார்த்தன் ரிஸீவரை காதுக்கு ஒட்டவைத்து “எஸ்” என்றான்.
“மிஸ்டர் சித்தார்த்தன்...! அயம் காமேஷ்வரன். உங்கக்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. ஒரு பத்து நிமிஷம் எனக்கு அப்பாய்ன்மென்ட் கொடுக்க முடியுமா...?”
சித்தார்த்தன் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை தள்ளி வைத்துவிட்டு பவ்யமாய் எழுந்தான்.
“அப்பா...! இப்படியெல்லாம் பேசி என்னோட மனசைக் கஷ்டப்படுத்தாதீங்க... உங்க மகனைப் பார்க்க நீங்க எப்ப வேணும்ன்னாலும்... வரலாம்...!” சொல்லிக் கொண்டே அறையின் கதவுக்குப் போய் தாழ்ப்பாளைப் பிடித்து இழுத்தான்.
வெளியே –
செல்போனோடு அவனுடைய அப்பா காமேஷ்வரன்.
“உள்ளே வாங்கப்பா...”
“பத்தே பத்து நிமிஷம் போதும். பதினோராவது நிமிஷம் வெளியே போயிடுவேன்... அப்பாய்ண்மென்ட் கிடைக்குமா...?”
“நீங்க மொதல்ல உள்ளே வாங்கப்பா...!”அறைக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த காமேஷ்வரனுக்கு அறுபது வயது. சற்று ஒடிசலான சிவப்பு நிற தேகம். மெலிதான நரைமுடியை படிய வாரியிருந்தார். மொட மொடப்பான கதர் வேஷ்டியும் சர்ட்டும் அவருடைய உடம்புக்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது.
“உட்கார்ங்கப்பா...!”
“நான் உட்காரலை... மொதல்ல இந்தப் போட்டோக்களைப் பாரு...!”
ஒரு ப்ரெளன் கவரை நீட்டினார்.
சித்தார்த்தன் நெற்றியில் பெரிதாய் ஒரு கேள்விக்குறி...!
“என்ன போட்டோஸ்?”
“வாங்கிப் பாரு... தெரியும்...”
வாங்கிப் பார்த்தான். கவர்க்குள்ளே ஐந்து போஸ்ட் கார்ட் சைஸ் போட்டோக்கள். ஒவ்வொரு போட்டோவிலும் ஒரு பெண் நேர்பார்வை பார்த்து புன்னகைத்தாள்.
“என்னப்பா இதெல்லாம்...?”
“பொண்ணுங்க எப்படி இருக்காங்க...?”
“நல்லாத்தான் இருக்காங்க...”
“இதுல யாராவது ஒரு பொண்ணை செலக்ட் பண்ணிச் சொல்லு... நாளைக்கு பெண் பார்க்க போலாம்.”
“அ... அப்பா...”
“என்ன...?”
“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்...! இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்...”
“எதுக்கு ரெண்டு வருஷம் வாய்தா கேட்கிறே?”
“கம்பெனியோட பிசினஸ் கிராப் இப்பத்தான் ரெய்ஸாகியிருக்கு... அதை இன்னும் டெவலப் பண்ணிட்டு...இதோ பார்ரா... கம்பெனியோட பிசினஸ் கிராப்பைப் பத்தி நீ கவலைப்படாதே... உனக்கு கீழே ஒரு ஏ.வி.பி., ஒரு ஜி.எம்., ரெண்டு டி.ஜி.எம்., நாலு மேனேஜர்ஸ், ஒரு அட்மினிஷ்ட்ரேஷன் ஆபீஸர், பத்து அக்கவுண்ட் ஆபீஸர்ஸ் இருக்காங்க. இவங்க எல்லாரும் கம்பெனியோட பிசினஸ் கிராப்பை பார்த்துக்குவாங்க.”
“அப்பா...! நான் என்ன சொல்ல வர்றேன்னா...?”
“நோ... ஆர்க்யூமெண்ட் ப்ளீஸ்... போட்டோக்களைப் பாரு...! அஞ்சுல ஒண்ணை செலக்ட் பண்ணு.”
“உடனேவா...?”
“உடனே... உடனே...!”
“எனக்கு அவகாசம் வேணும்...”
“எப்ப எனக்கு உன்னோட முடிவைச் சொல்லுவே?”
“இன்னிக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு உங்க கையில இந்த போட்டோக்களில் ஏதாவது ஒண்ணு இருக்கும்.”
“நிஜமாத்தானே சொல்றே...?”
“இதுல பொய் சொல்ல என்னப்பா இருக்கு...?”
“சித்தார்த்...! இந்தப் போட்டாக்களில் இருக்கிற பெண்கள் எல்லாமே நம்ம ஸ்டேட்டஸுக்கு ஏத்த மாதிரி பெரிய இடத்துப் பெண்கள். இதுல நீ யாரை செலக்ட் பண்ணினாலும் எனக்கு சந்தோஷமே!”
“ராத்திரி நான் வீட்டுக்கு வரும்போது உங்களுக்கு போட்டோவைக் கொடுத்துடறேன். போதுமா...?”
“போதும்...! நான் புறப்படறேன்... நீயும் வீட்டுக்கு சீக்கிரமே வந்து சேரு… உழைப்புக்கும் ஒரு எல்லை இருக்கு... ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்த உடம்பு இப்போ இல்லை. கண்ணாடிக்கு முன்னாடி ஒரு ரெண்டு நிமிஷம் நின்னு உன்னையே நீ பார்த்துக்கிட்டாத்தான் தெரியும்... எப்படி இளைச்சு போயிருக்கேன்னு...!”
சித்தார்த் சிரித்தான். “அப்பா...! அடுத்த மாசம் ஊட்டிக்குப் போய் பதினஞ்சு நாள் ரெஸ்ட் எடுக்கப் போறேன். அந்த ரெஸ்ட்ல பழைய உடம்பு வந்துடும்...! கவலைப்படாதீங்க...!உன்னோட அம்மா உயிரோடு இருந்திருந்தா இப்படி உன்னை விட்டிருக்கமாட்டா... எப்பவோ கல்யாணத்தை பண்ணி வெச்சிருப்பா... நீயும் ஒரு பேரப் பிள்ளையையோ பேத்தியையோ பெத்து கொடுத்து இருப்பே...!’ காமேஷ்வரன் தனக்குள் முனகிக் கொண்டே அறையைவிட்டு வெளியேறினார்

Weitere Titel von diesem Autor
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
Weitere Titel in dieser Kategorie
Cover ஒற்றை மேகம்
ராஜேஷ்குமார்
Cover அந்த ரத்த நாட்கள்
ராஜேஷ்குமார்
Cover லேகா என் லேகா
ராஜேஷ்குமார்
Cover சிறகடிக்க ஆசை!
ராஜேஷ்குமார்
Cover தப்பு + தப்பு = சரி
ராஜேஷ்குமார்
Cover கருநாகபுர கிராமம்
ராஜேஷ்குமார்
Cover வானவில் குற்றம்
ராஜேஷ்குமார்
Cover புதிய பாடல் பாடு
ராஜேஷ்குமார்
Cover திக் திக் டிசம்பர்
ராஜேஷ்குமார்
Cover கண்ணை நம்பாதே
ராஜேஷ்குமார்
Cover முடிந்தால் உயிரோடு
ராஜேஷ்குமார்

Kundenbewertungen

Schlagwörter

thriller, rajeshkumar, Vishnu Vetri, suspense, Vivek, detective, crime novel