கோவையில் ஒரு குற்றம்
ராஜேஷ்குமார்
* Affiliatelinks/Werbelinks
Links auf reinlesen.de sind sogenannte Affiliate-Links. Wenn du auf so einen Affiliate-Link klickst und über diesen Link einkaufst, bekommt reinlesen.de von dem betreffenden Online-Shop oder Anbieter eine Provision. Für dich verändert sich der Preis nicht.
Belletristik / Spannung
Beschreibung
பாரஸ்ட் காலேஜிற்கு கொஞ்சம் தள்ளி - ஏராளமான சவுக்கு மரங்களுக்கு மத்தியில் காவி நிற டிஸ் டெம்பரோடு - அந்த ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் தெரிந்தது. மெயின் ரோட்டிலிருந்து உள்ளே போன - அந்த பத்தடி அகல மண்பாதை கூட வெகு புராதனமாய் வளைந்து வளைந்து போயிருந்தது. 'புதை பொருள் ஆராய்ச்சி நிலையம்' என்கிற வார்த்தைகளை இந்தியிலும் இங்கிலீஷிலும் மொழிபெயர்த்துச் சொன்ன அந்த போர்டு சமீபத்திய மழையிலும் வெய்யிலிலும் வெகுவாய் பாதிக்கப்பட்டிருந்தது. - உள்ளே இருந்த ரீடிங் ஹாலில் -வரிசையாய் நாற்காலிகள் போடப்பட்டிருக்க - ஏழு நாற்காலிகளில் ஜெசிந்தாவிலிருந்து - ஊர்மிளா வரை நிரம்பியிருந்தார்கள். பக்க வாட்டு நாற்காலிகளில் தேவாமிர்தமும் - அகிலா நாராயணனும் மோவாய்களைத் தாங்கி தெரிந்தார்கள். அவர்களுக்கு முன்புறமாய் இருந்த மேடையின்மேல் புரபசர் லிங்கப்பா தன் குறுந்தாடியை இடது கையால் சொறிந்து கொண்டே - வலது கையிலிருந்த குச்சியை சுவரில் மாட்டியிருந்த ஒரு மேப்பின் மேல் நகர்த்திக் கொண்டிருந்தார். மேப்பின் நெற்றியில் சிறுவாணி - வெள்ளியங்கிரி காடுகள் என்று எழுதியிருந்தது. மேப் பூராவும் சிவப்பு புள்ளிகள்.
லிங்கப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.
“நீங்கள் புறப்பட்டு போக வேண்டிய இடம் சிறுவாணிக்கும் வெள்ளியங்கிரிக்கும் இடைப்பட்ட பாரஸ்ட்... அந்தப் பகுதியை புல்லு மேடுன்னு சொல்லுவாங்க... அடர்த்தியான பாரஸ்ட்... பாரஸ்ட்டுக்குள்ளே தோல் பதனிடுகிற தொழிற்சாலையொண்ணு பல வருஷமா மூடியிருக்கு. அதுல வேலை நடந்தப்போ லேசா ஜனநடமாட்டம் இருந்து வந்தது... ஆனா இப்போ நடமாட்டமே இல்லை...”
ஜெசிந்தா எழுந்து நின்றாள்“ஸார்... ஒரு சந்தேகம்?”
“என்ன?”
“அந்த இடத்துல போய் தோல் பதனிடற தொழிற்சாலையை யார் ஸார் கட்டினாங்க?”
“ரோத்மான் என்கிற ஒரு வெள்ளைக்காரன்... ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தஞ்சுல கட்டின தொழிற்சாலை அது... அவனுக்கப்புறம் எத்தனை பேர்கிட்டே அது கைமாறி இப்போ கோயமுத்தூர் மில் ஓனர் ஒருத்தர் கிட்டே இருக்கு... அஞ்சு வருஷம் தொழிற்சாலையை அவரும் நடத்திப் பார்த்தார். முடியலை. மூடிட்டார்...”
இதயா எழுந்தாள்.
“நாங்க போக வேண்டிய இடம் எது ஸார்...?”
“புல்லுமேடு பாரஸ்ட்... பேர்தான் புல்லு மேடு... ஆனா உள்ளே பூராவும் ராட்சச மரங்கள். சூரிய வெளிச்சம் ஒரு சொட்டு கூட கீழே விழாத பூமி... நீங்க தேடிப் போற காளி கோயில் அங்கேதான் இருக்கு. அந்த காளி கோயிலோட பேர் என்ன தெரியுமா...?”
புரபசர் லிங்கப்பா நிறுத்திவிட்டு - எல்லோருடைய முகங்களையும் பார்த்தார். அவருடைய இடது கை தாடையில் இருந்த சொற்ப தாடியை சட்சட்சென்று வருடிக் கொண்டிருந்தார். அரை நிமிஷ நேரம் ஹால் முழுவதும் நிசப்தம்... பிறகு அந்த நிசப்தத்தை புரபசர் லிங்கப்பாவே கலைத்தார்.
“உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க நியாயமில்லை... அந்தக் காளியம்மனோட கோயில் பேரு குடல் வாங்கி காளியம்மன் கோயில்... ரொம்பவும் உக்கிரமான காளி... ஒவ்வொரு அமாவாசையன்னிக்கும்தான் பூசாரி அங்கே போவார். உச்சி நேர பூஜையை முடிச்சுகிட்டு உடனே தன்னோட செம்மேட்டு கிராமத்துக்கு போயிடுவார். அந்த கோயிலுக்குன்னு ஒரு ஜனம் கூட போகாது...”
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு - காஞ்சனா மெள்ளமாய் எழுந்து நின்றாள்.
“அந்த கோயில் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது ஸார்...?“பதினாறாம் நூற்றாண்டு... சேரன் இரும்பொறை காலத்துல அந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம்... எல்லாமே கருங்கல்... காளி சிலையோட உயரம் ஏழடி. உக்கிரம் அதிகம். ஏந்தியிருக்கிற சூலத்துல குடல் தொங்குகிற கோரம்...”
சில விநாடிகள் பேச்சை நிறுத்திவிட்டு - மறுபடியும் தொடர்ந்தார் லிங்கப்பா...” உங்களுக்கு அந்த காளி சிலையோ... காளி கோயிலோ முக்கியமில்லை... அதைச் சுற்றி இருக்கிற ஐநூறு மீட்டர் தூரம்தான் முக்கியம்... கடந்த அஞ்சு வருஷ காலத்துல மூணு கல்வெட்டுக்களை அங்கிருந்து தோண்டி எடுத்திருக்கோம். நீங்க எப்படியாவது ஒரு கல்வெட்டையாவது கொண்டு வரணும்... உங்க குழு தலைவர் மிஸ்டர் தேவாமிர்தமும் - திருமதி அகிலா நாராயணனும் இந்த ஆர்க்கியாலஜி துறையில் பல வருஷமா ஈடுபட்டு இருக்கிறவர்கள். கல்வெட்டை கொண்டு வர்ற முயற்சியில் உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க...”
“நாங்க எப்போ புறப்படணும்... ஸார்...?” இதயா மறுபடியும் எழுந்து கேட்க - லிங்கப்பா சொன்னார்.
Kundenbewertungen
crime novel, rajeshkumar, Kovaiyil Oru Kutram, detective, thriller, suspense